காதல் கவிதை
பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.
பேயோன் on March 31st 2010 in கவிதை
பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.
பேயோன் on March 31st 2010 in கவிதை
1.
அறம்செய விரும்பு
ஆறுவது சினம்
என்கிறார் அவ்வையார்
யாராவது கேட்டால்தானே.
2.
கணவன் நான்
மனைவி நீ
நடத்துவோம் இல்லறம்
வீடுதான் தாம்பரம்
3.
கவிதை கவிதை போல்
இருக்கக் கூடாது
என்கிறான் மலையாளி
இதென்ன புதுக் கரடி?
பேயோன் on March 29th 2010 in கவிதை
1.
கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு
2.
வாளை விட வலியதாம்
விசைப்பலகை
3.
பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது
4.
விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல
விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்
5.
இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்
பேயோன் on March 24th 2010 in கவிதை