பேயோன்

படித்ததில் பிடித்தவன்

ஐந்துக் கவிதைகள்

March 24th, 2010

1.

கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு

2.

வாளை விட வலியதாம்
விசைப்பலகை

3.

பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது

4.

விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல

விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்

5.

இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்

Comments

6 Comments

RSS
  • பேயோன்No Gravatar says on: March 24, 2010 at 11:23 am

     

    இன்று வெயில் சுமார் 35 டிகிரி.

  • ஆயில்யன்No Gravatar says on: March 24, 2010 at 11:24 am

     

    டோட்டலா மிளிர்கிறது :)

  • பேயோன்No Gravatar says on: March 24, 2010 at 11:48 am

     

    நன்றி. ‘டெரராக’ இல்லாததில் மகிழ்ச்சி.

  • ssrajapriyanNo Gravatar says on: March 24, 2010 at 12:42 pm

     

    super

  • HariNo Gravatar says on: March 24, 2010 at 10:25 pm

     

    1st one was verygood. Others are nice.

    Keep writing!

    hari
    http://mybuks.blogspot.com

  • பேயோன்No Gravatar says on: March 25, 2010 at 10:08 am

     

    Hari – ஏன், முதல் கவிதை தவிர மற்றவை புரியவில்லையா?

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar