பேயோன்

படித்ததில் பிடித்தவன்

இட்டுக்கட்டி எழுதிடும்…

June 23rd, 2010

இந்த கவிதைக்கு பதிலாக தனி இடுகையாக ஒரு முறை….

இட்டுக்கட்டி எழுதிடும்
எட்டுப்பட்டி இலக்கியன்
கட்டப்பட்டு உருட்டிய
லிட்டரேச்ச எழுத்தினை

நட்டகல்லு என்றிடும்
திட்டமிட்ட உள்ளுறை
பட்டவர்த்த னத்தைகை
தட்டிமெச்சும் போதிலே

அட்டதிக்கு முழுவதை
அட்டுபீசு ஆள்கையில்
தொட்டதைத் துலக்குமிக்
கட்டமைப் புடைப்பவன்

கட்டுவித்த பனுவலும்
நட்டகல்லென் றாகினால்
எட்டிநிற்கும் வாசகன்
நாதனாவ தெப்படி?

Comments

6 Comments

RSS
  • கென்No Gravatar says on: June 23, 2010 at 10:47 pm

     

    நட்டக்கல்லும் தெய்வமோ;)))))))))))))

    செம்மொழிக்கொண்ட நீவிர் நாலாயிரம் யுகங்கள் வாழ்வீராக

  • சித்தார்த்No Gravatar says on: June 24, 2010 at 9:55 am

     

    //அட்டதிக்கு முழுவதை
    அட்டுபீசு ஆள்கையில்//

    :))))))))))

  • KirubasankarNo Gravatar says on: June 25, 2010 at 1:02 pm

     

    Hello Mr.Payon,
    I read that kavidhai “Ittukatti Ezhudhidum”. While reading its giving me a feel of reading some sidhar paadalgal. Especially Sidhar Sivavaakiyar”. !!
    Have you familiar with Sidhar padalgal.?

  • பேயோன்No Gravatar says on: June 25, 2010 at 2:06 pm

     

    கிருதாசங்கர்: முதலில் கவிதை எழுதிய டகால்டி என்பவர் அந்த சந்தத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தார். நான் அதை பின்பற்றினேன், அவ்வளவுதான். ‘நட்டகல்லும் பேசுமோ’வை படிக்காத அல்லது கேள்விப்படாத தமிழ் வாசகர்கள் இருப்பார்களா?

  • sankarNo Gravatar says on: June 25, 2010 at 11:10 pm

     

    அபாரம் !!!!!!!குருவே நீங்கள் யார் !!

  • பேயோன்No Gravatar says on: June 25, 2010 at 11:20 pm

     

    சங்கர்: பிரபல எழுத்தாளன்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar