திரும்பிப் பார்த்தபடி சிரிக்கிறார்கள்
கையில் முகம் ஊன்றிச் சிரிக்கிறார்கள்
மேலே பார்த்துச் சிரிக்கிறார்கள்
தலை குனிந்தபடி சிரிக்கிறார்கள்
காமிராவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
கும்பலில் சிரிக்கிறார்கள்
கண்ணை மூடிச் சிரிக்கிறார்கள்
எவ்வளவு நல்லவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள்
இந்தக் கவிதைக்குப் பக்கத்தில் வலது பக்கத்தில் இருக்கும் போட்டோவில் இருப்பவர் மட்டும் என்ன விதிவிலக்கா?:>
நானும் புகைப்படம் என்றால் இப்படி எல்லாம் சிரிப்பேன்.
மானஸ்தன், IM: முக்கியமான கருத்து.
நல்ல வேளை மரத்தில் சாஞ்சபடி நின்னு சிரிப்பவர்கள் உங்க நினைப்புல வர்ல :)
இதில் கண்ணை மூடி சிரிச்சது கவிதையிலிருந்து மட்டுமல்ல காமிராவிலுருந்தும் கழட்டி விடணும் என்ன சொல்றீங்க பாஸ்? :)
பேயோன் சார்,
எப்படி இந்த தடவ எனக்கு(ம்) புரியற மாதிரி எழுதினீங்கன்னு எனக்கு புரியவேயில்லை :)
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
எவ்வளவுதான் நாம காமராவை பார்த்து சிரித்தாலும் காமரா நம்மைப்பார்த்து சிரிப்பதேயில்லை!
பேயோனின் தத்துவத்தை விட உங்களது தத்துவம் அருமையாக உள்ளது அதிஷா அண்ணா.
பேயோன்
Reply:
December 5th, 2010 at 7:04 pm
தம்பி, அது தத்துவம் அல்ல, கவிதை. இரண்டும் வெவ்வேறு.