பேயோன்

படித்ததில் பிடித்தவன்

புகைப்படங்களில்

November 30th, 2010

திரும்பிப் பார்த்தபடி சிரிக்கிறார்கள்
கையில் முகம் ஊன்றிச் சிரிக்கிறார்கள்
மேலே பார்த்துச் சிரிக்கிறார்கள்
தலை குனிந்தபடி சிரிக்கிறார்கள்

காமிராவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
கும்பலில் சிரிக்கிறார்கள்
கண்ணை மூடிச் சிரிக்கிறார்கள்

எவ்வளவு நல்லவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள்

Comments

8 Comments

RSS
  • மானஸ்தன்No Gravatar says on: November 30, 2010 at 10:12 pm

     

    இந்தக் கவிதைக்குப் பக்கத்தில் வலது பக்கத்தில் இருக்கும் போட்டோவில் இருப்பவர் மட்டும் என்ன விதிவிலக்கா?:>

  • Incredible MonkeyNo Gravatar says on: November 30, 2010 at 10:20 pm

     

    நானும் புகைப்படம் என்றால் இப்படி எல்லாம் சிரிப்பேன்.

  • பேயோன்No Gravatar says on: November 30, 2010 at 11:00 pm

     

    மானஸ்தன், IM: முக்கியமான கருத்து.

  • ஆயில்யன்No Gravatar says on: November 30, 2010 at 11:03 pm

     

    நல்ல வேளை மரத்தில் சாஞ்சபடி நின்னு சிரிப்பவர்கள் உங்க நினைப்புல வர்ல :)

    இதில் கண்ணை மூடி சிரிச்சது கவிதையிலிருந்து மட்டுமல்ல காமிராவிலுருந்தும் கழட்டி விடணும் என்ன சொல்றீங்க பாஸ்? :)

  • சுவாசிகாNo Gravatar says on: December 2, 2010 at 3:33 pm

     

    பேயோன் சார்,
    எப்படி இந்த தடவ எனக்கு(ம்) புரியற மாதிரி எழுதினீங்கன்னு எனக்கு புரியவேயில்லை :)

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  • அதிஷாNo Gravatar says on: December 4, 2010 at 3:47 pm

     

    எவ்வளவுதான் நாம காமராவை பார்த்து சிரித்தாலும் காமரா நம்மைப்பார்த்து சிரிப்பதேயில்லை!

  • ஞெலிநரி வெய்யோன்No Gravatar says on: December 4, 2010 at 6:00 pm

     

    பேயோனின் தத்துவத்தை விட உங்களது தத்துவம் அருமையாக உள்ளது அதிஷா அண்ணா.

    பேயோன்No Gravatar Reply:

    தம்பி, அது தத்துவம் அல்ல, கவிதை. இரண்டும் வெவ்வேறு.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar