இரு கவிதைகள் June 13th, 2011 1. உலகில் புதிதென எதுவுமில்லை இப்படிச் சொல்வதுங்கூட இப்படிச் சொல்வதும் கூட 2. காலம் ஒற்றைக் காலால் நடக்கிறது
காவிய
வில்லை
உடைத்தான்
ராமன்
கவிய
வில்லை
உடைக்கவா
நானும்
?
பேயோன்
Reply:
June 13th, 2011 at 1:30 pm
காலக் காலை உடைக்கலாம். காவியக் காலை உடைக்கலாமா? எழுத்தாளன் என்கிற முறையில் மனம் அரற்றுகிறது.
உங்கள் கவிதை மிக அருமை.!
பேயோன்
Reply:
June 13th, 2011 at 1:31 pm
தெரியும். நன்றி.
காலாகாலத்தில் இரண்டு கால்களும் வரும்!
காலம்=கால்+அம்
காலாகாலம்=கால்+ஆ+கால்+அம் So, இரண்டு கால்கள்
இன்னொரு வகையில் பார்த்தால் மொன்று
[தமிழ் பற்றாளர்கள் மண்ணிக்க]
பேயோன்
Reply:
June 13th, 2011 at 1:32 pm
தமிழ்ப் பற்றாளர்கள் உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியை படித்ததுமே ஓடியிருப்பார்கள். மன்னிக்க ஆளிருந்தால்தானே.
//காலம் ஒற்றைக்
காலால் நடக்கிறது//
அதனால் தான் எல்லோரும் சீக்கிரத்தில் நொடிச்சு போறாங்க? – காலத்தின் மிஸ்டேக்குதானா?
காலம் நம்முடன் நொண்டி விளையாடுதுனு சூசகமா சொல்றீங்க, அப்படித்தானே தலைவா!