பேயோன்

படித்ததில் பிடித்தவன்

Comments

15 Comments

RSS
  • அதிஷாNo Gravatar says on: June 22, 2011 at 6:36 pm

     

    வெறுண்மையும் பொறுண்மையும் கலந்த பேரன்பின் வெளிப்பாடாக கடுந்தனிமையின் தேவையை இக்கவிதை உணர்த்துகிறது.

    பேயோன்No Gravatar Reply:

    தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்கும்போது அவை பொருளும் படுமாறு பார்த்துக்கொள்ளவும்.

    அதிஷாNo Gravatar Reply:

    அதெல்லாம் பார்த்தா உங்களை மாதிரி பிரபல இலக்கியவாதி ஆகமுடியுமா பாஸ்!

  • dagaltiNo Gravatar says on: June 22, 2011 at 7:46 pm

     

    நற்கவிதை!
    வளர்க உங்கள் மொழித்தொண்டு.

    எனது கவிதானுபவ விளக்கம் கீழே:

    1) ஒரு பிரதி பல பிரதிகளை சுட்டும் சுட்டித்தனமான எழுத்தும் வாசிப்பும் இன்றைய சூழலில் இன்றியமையாதது இதைத்தான் ஹைப்பர்டெக்ஸ்டுவாலிட்டு என்று சான்றோர் குறுப்பிடுவர். ஒரு பிரதியை வாசித்தவுடன் நூல் பிடித்தாற்போல பற்பல பிரதிகளுக்கு செல்லவேண்டியிருக்கும் வாசக நிலையை பட்டவர்த்தனமாக குறிப்புணர்த்துகிறது http என்ற முதல்வரி.

    2) பிரதிநொடி பிரதி தேடுவோரின் தேடல் வகைமுறை என்னவாக இருக்கவேண்டும்? ஆங்கில கேள்விஞானத்தில் ஈடுபாடுள்ளவர்கள் த த்ரீ டபிள்யூசு என்று குறிப்பிடும்: ‘ஏன், எது, எங்கு’ என்று தொடர்ந்து வினவினாலன்றோ விடை கிட்டும் என்கிறது இரண்டாம் வரி.

    3,4) தேடலை விட, தேடல் வழிகள் முன்நிறுத்தப்படுவதை முறையே மூன்றாம், நான்காம் வரிகளின் வரிசை புலப்படுத்துகிறது.

    5) கேள்வியின் நாயகனாம் q யாருமற்றவன் என்று சமன்பாட்டிம் மூலம் குறிப்புணர்த்தும் கவிஞர், கூட்டல் குறி மூலம் அவன் தனது தனிமையை களைய முனைவதை சுட்டி நெகிழ வைக்கிறார். இதைத் தான் மேலைநாட்டறிஞர் மினிமலிசம் என்பர்.

    6) குறுஞ்செய்தி மொழியில் ஹாம்லெட் புகழ் ஷேக்ஸ்பியப் பெருந்தகை எழுதிய் ஹாம்லெட்டில் வரும் பிரபல தனிப்பேச்சை கையில் எடுக்கிறார் கவிஞர். ‘இருப்பதா’ என்று அங்கு வரும் வரியை, மேற்படி ஹைப்பர்டெஸ்டுவாலிட்டு மூலம், ‘கவிதையாக இருப்பதா’ என்று மாற்றிக் கேட்டிருக்கிறார் (அதாவது ‘கவிவதா கவியாமல் உரைவதா’).

    முழுவதும் கவியத் தேவையில்லை, ஏதோ கொஞ்சம் விழுக்காடு கவிந்தால் கூட போதும் என்று முன்னொட்டு மூலம் உணர்த்தி, இன்றைய கவியுலக நிலைமையை பகடி செய்கிறார்.

    இதுபோன்ற அபார படைப்புகளால் தான் ‘எவ்வளவு தூரம் தான் போகிறார் பார்ப்போம்’ என்ற வாசக விட்டேத்தி வளர்கிறது.

    பேயோன்No Gravatar Reply:

    ஸ்னூப்பரிச பட்டுடைக்கு வங்க அஸ்திரமாக பணிசெய்கிறது உங்கள் கருத்துக்கோர்வை.

    சித்ரன்No Gravatar Reply:

    .com என்ற சொல்லாடலின் மூலம் இது உலகளாவிய கவிதையாக விஸ்வரூபம் கொண்டுவிட்டது.

  • writerparaNo Gravatar says on: June 22, 2011 at 7:53 pm

     

    என் பங்குக்கு ஓர் ஆங்கிலக் கவிதை:

    .format-status .featured-image {
    float:left;
    width:60px;
    height:60px;
    margin:1.5em 0;
    padding:0;
    border-width:0;
    }
    .format-status .entry-title,
    .format-status .entry-content,
    .format-status .entry-meta {
    margin-left:75px;
    }

    பேயோன்No Gravatar Reply:

    உங்களுக்கு ஓவியம் மட்டும்தான் புரிவதில்லை என்று நினைத்தேன்.

    சித்ரன்No Gravatar Reply:

    பாரா எழுதினதில் left என இரு தடவைகள் வருவதால் அது இடதுசாரிக் கவிதையாக இருக்க வாய்ப்புண்டு.

  • NatarajanNo Gravatar says on: June 22, 2011 at 8:22 pm

     

    Coding புரியவில்லை என்றாலும் கூட பொருள் புரிகிறது!!

    மிக அழகு

    பேயோன்No Gravatar Reply:

    நன்றி.

  • ஸ்ரீதர் நாராயணன்No Gravatar says on: June 22, 2011 at 8:41 pm

     

    >> ஸ்னூப்பரிச பட்டுடைக்கு வங்க அஸ்திரமாக பணிசெய்கிறது உங்கள் கருத்துக்கோர்வை. <<

    :)))))))))))

    எவ்வளவு தூரம் தான் போகிறீங்க… பார்ப்போம்!

  • மாயவரத்தான்....No Gravatar says on: June 23, 2011 at 7:02 pm

     

    ஹல்லோ.. ஃபேஸ்புக்கிலே சாட்டிங்க்கு வரணுமாம்.. யாரோ உங்களைக் கூப்பிடுறாங்க!

  • KARTHI_1No Gravatar says on: June 23, 2011 at 10:29 pm

     

    ’யாருமற்ற கவிதை’ என கூகலிட்டவரின் தனிமைத் துயரை இக் கவிதை அப்படியே பிரதிபலிக்கிறது..

    வாழ்த்துக்கள் (யாருக்கோ.. )

  • YetanothervenkatNo Gravatar says on: June 26, 2011 at 5:39 pm

     

    Bravo!

    Reminiscent of The Magritte’s Treachery Of Images.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar