சொற்கம்

எப்போதாவதிற்கென
எடுத்துப் பார்க்க
உன் உடலிளைத்த
பழைய புகைப்படம் ஒன்று
பசித்தால் புசிக்க
நிலவில் தோய்த்த
தாரகைத் துண்டுகள்
கடலை தியானிக்காத
பொழுதுகளில் படித்தாழ
தேவதைக் கதைகள்
அந்திக்குச் சுவை கூட்ட
ஒரு மொந்தை அனிச்ச மது
ஆளில்லாத ஒரு தீவில்
என் தனித் தங்கலுக்குப்
போதுமிவை மட்டுமெனக்கு.