<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேயோன் &#187; அலைதல்</title>
	<atom:link href="http://www.writerpayon.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerpayon.com</link>
	<description>படித்ததில் பிடித்தவன்</description>
	<lastBuildDate>Fri, 27 Jan 2012 15:19:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>சம்பவக் காலை</title>
		<link>http://www.writerpayon.com/2011/11/19/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/</link>
		<comments>http://www.writerpayon.com/2011/11/19/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 19 Nov 2011 07:41:46 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[ஓவியம்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[புனைவு]]></category>
		<category><![CDATA[அலைதல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpayon.com/?p=2348</guid>
		<description><![CDATA[புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர &#8230; <a href="http://www.writerpayon.com/2011/11/19/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-2349" title="" src="http://www.writerpayon.com/wp-content/uploads/2011/11/sambavam.jpg" alt="" width="500" height="374" /></p>
<p>புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. &#8216;எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?&#8217; எனப் புதிருற்றார். &#8220;எங்க சார் வேகமா?&#8221; என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், &#8220;என்னை ஒருத்தன் திட்டிட்டான்&#8221; என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் &#8211; &#8220;வாட் எ மேன்!&#8221;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2011/11/19/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விதியின் இசை</title>
		<link>http://www.writerpayon.com/2011/07/30/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88/</link>
		<comments>http://www.writerpayon.com/2011/07/30/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 30 Jul 2011 12:42:41 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அலைதல்]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpayon.com/?p=1997</guid>
		<description><![CDATA[மனைவி ஊரில் இல்லை. ஏன், இந்த மாவட்டத்திலேயே இல்லை. மகனும் இல்லைதான். ஆனால் ஒரு பெரிய இழப்பிற்காகச் சிறிய இழப்பை சகித்துக்கொள்வதில் குற்றமில்லை. சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டிற்காக வெளியே போக வேண்டியிருப்பதையும். சாப்பாட்டிற்கு அலையவே நேரம் சரியாக இருந்தால் யசுநாரி கவாபாட்டாவைத் தேடி அலைவது எப்போது? சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டு வாசலுக்குத் திரும்பி &#8230; <a href="http://www.writerpayon.com/2011/07/30/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனைவி ஊரில் இல்லை. ஏன், இந்த மாவட்டத்திலேயே இல்லை. மகனும் இல்லைதான். ஆனால் ஒரு பெரிய இழப்பிற்காகச் சிறிய இழப்பை சகித்துக்கொள்வதில் குற்றமில்லை. சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டிற்காக வெளியே போக வேண்டியிருப்பதையும். சாப்பாட்டிற்கு அலையவே நேரம் சரியாக இருந்தால் யசுநாரி கவாபாட்டாவைத் தேடி அலைவது எப்போது?</p>
<p>சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டு வாசலுக்குத் திரும்பி வந்து பழக்க தோஷத்தில் &#8220;காலிங் பெல்&#8221;லை அழுத்துகிறேன். பிறகு மனைவி இல்லாததை உணர்ந்து தொடையை ஓங்கித் தட்டியபடி உரக்க சிரித்துக்கொண்டு கதவைத் திறக்கிறேன். இந்த சாவியைப் பையில் வைத்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால், அது இருக்க இடத்திற்குள்ளே அனுமதித்தாலும் உருவம் மிகச் சிறியது. ஒவ்வொரு முறையும் வீட்டு வாசலுக்கு வந்து பாக்கெட்டில் கையை விடும்போது முதல் துழாவலில் சாவி கிடைக்கவில்லை என்றால் பகீரென்கிறது. தொலைந்துவிட்டால் நெஞ்சு பதைக்க வேண்டியதுதான்.</p>
<p>மகனைப் பிரிய வேண்டியிருப்பது அவ்வப்போதின் அவசிய கட்டாயம். மகன் என்பதாலேயே* (*அதுவும் என் மகன் என்பதால்) அவன் மேல் எனக்கு நிறைய பிரியம். தோளுயரம், இடுப்பகலம் வளர்ந்துவிட்டாலும் அவன் குழந்தையாக இருந்தபோது எனக்கு அவன் மீதிருந்த பாசத்தில் பாதியாவது பாக்கியிருக்கிறது. இப்போதும் அவன் எனக்குக் குழந்தைதான். ஏனென்றால் காலம் எல்லோரையும் அல்லவா கூண்டோடு காய்நகர்த்துகிறது.</p>
<p>வீடே அமைதியாக இருக்கிறது. கேட்கிற ஒரே சத்தமும் மாடி வீட்டிலிருந்து வருகிறது. வீட்டில் ஆள் இருந்தால் ஆளின் குரல்தான் கேட்டுக்கொண்டிருக்கும். படிக்கும் பத்திரிகையில் சுவாரசியமான கட்டுரையோ டி.வி. சினிமாவில் சிலிர்ப்பான சண்டைக் காட்சியோ வரும் சமயம் பார்த்து மனைவி ஊர் வம்பு, வீட்டுப் பொருளாதாரம் பேசத் தொடங்கிவிடுவார். ஆச்சரியக்குறிகள், மேற்கோள் குறிகள் தவிர வேறு நிறுத்தக்குறிகள் அறவே இல்லாத பேச்சு அவருடையது. மிகைப்படுத்தப்பட்ட மிமிக்ரியுடன் கூடியது. இதற்கு &#8220;விதியின் இசை&#8221; என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட சத்தம்தான் இப்போது வீட்டில் இல்லை. காற்றுக்கூட காலி திருமண மண்டபத்தில் குழந்தைகள் போல சுதந்திரமாய் விளையாடுகிறது.</p>
<p>ஏதோ காலாற நடந்து போனோம், நான்கு விஷயம் பார்த்தோம், மனதில் குறித்துக்கொண்டோம், இல்லை, இந்த வரி வேண்டாம், நன்றாயிருக்காது, அதை இப்படி எழுதினால் வாசக மனதுக்குப் பாந்தமாக இருக்கும், இந்த வார்த்தை புரியாது, அதை இப்படி எளிமைப்படுத்துவோம், இந்த சம்பவத்தை இதனோடு முடிச்சுப் போட்டு நினைவூகூர்த்திக் காட்டலாம் என்கிற ரீதியில் நடந்து போகும்போதே அதைப் படைப்பாக வளர்த்தோம் என்றில்லாமல் வழியில் ஏதாவது கடையில் நின்று கையில் பையைச் சுமந்துகொண்டு திரும்பி வர வேண்டியிருக்கிறது. இந்த பாலிதீன் பையை நான் எந்தளவுக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறேனோ அதேயளவு அதுவும் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுவதுண்டு. பாலிதீன் பை போன்ற லௌகீகத்தின் ஏஜெண்டுகளை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்:- எல்லாமே மனைவி வாயிலாக வருகின்றன. அதனால்தான் ஒரு மனைவி வெளியூர் போகும்போது மனம் லேசாகிறது.</p>
<p>ஒரு மனைவிக்கு ஒரு காபியைக் கொண்டுவந்து கணவனிடத்தில் வைக்க சராசரியாக எத்தனை நேரம் ஆகிறது? சில நொடிகளே. அந்தச் சில நொடிகளில் ஒரு கணவனுக்கு அந்த மனைவியினிடத்தில் ஏற்படும் அன்பு அளக்க முடியாதது, படுதீவிரமானது. கணவனுக்கு மனைவி மீதான இந்த அன்பு நாளொன்றிற்கு சுமார் 30 நொடிகளுக்குக் குறையாதளவு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்குக் குறைவாக நீடிக்கும் எந்த தாம்பத்திய அன்பும் கற்பனாவாதிகளுக்குக் கம்மியாகத் தெரியலாம். ஆனால் ஒரு தம்பதியினர் சராசரியாக 40 வருசக்காலம் மண வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது இந்த நாளொன்றைய 30 நொடிகள் வருசக் கணக்கீட்டில் பல மணிநேரங்களாய் குவிந்துவிடுகின்றன. ஒரு கணவனுக்குத் தன் மனைவி மேல் இத்தனை மணிநேர தீவிர அன்பு இருந்தால் அவனுக்கு என்ன ஆகும்? பொதுவாக தம்பதிகளில் முதலில் சாவதும் யார்?</p>
<p>ஆயிற்று, இன்னும் இரு நாட்களில் வாழ்க்கை தனது ஒப்பனையைக் கலைத்துக்கொண்டு மனைவியை ஊரிலிருந்து திருப்பி அனுப்பிவிடும். இதில் என்ன ஆறுதல் தெரியுமா? நானும் கூடவே போயிருக்க வேண்டியவன். வர மாட்டேன் என்ற வாதம் பெரும்பாலும் எடுபடாது. இன்ன வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் நிறைவேறிய பின் கைக்கு இத்தனை ரூபாய் வரும் என்று சொல்லித்தான் தனிமையை ஈட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி போகுமிடமெல்லாம் அயோத்தியை இழுத்துக்கொண்டு போகிறார்கள் இக்கால சீதைகள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2011/07/30/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கவிதை</title>
		<link>http://www.writerpayon.com/2011/06/12/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://www.writerpayon.com/2011/06/12/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 12 Jun 2011 07:05:04 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[அலைதல்]]></category>
		<category><![CDATA[இரவு]]></category>
		<category><![CDATA[உயர்கவித்துவம்]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[காத்திருப்பு]]></category>
		<category><![CDATA[நான்]]></category>
		<category><![CDATA[நீ]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpayon.com/?p=1716</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://www.writerpayon.com/wp-content/uploads/2011/06/varaipadam.jpg"><img class="aligncenter size-full wp-image-1717" src="http://www.writerpayon.com/wp-content/uploads/2011/06/varaipadam450.jpg" alt="" width="450" height="457" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2011/06/12/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
	</channel>
</rss>

