உன்னுடன் ரசித்த முதல் மழை

எழுதப்படாத புத்தகத்தின் பக்கங்கள்
படபடக்கின்றன ஜன்னல்வழிக் காற்றில்

சருகுகளின் அவசர ஊர்வலத்தை
கலைக்கின்றன நம் கால்கள்

சாலையெங்கும் கரும்பூக்கள்
நிலம் நோக்கி மலர

வானில் ஒளிவிரிசல்
மழைப் பள்ளம்
துளி வெள்ளம்

ஓலின் ஓலம் அடக்கிப்
பறந்து போகின்றன குருவிகள்
அடுத்த பாட்டத்தை அஞ்சி

இன்னமும் காத்திருக்கிறது வெறுமையாய்
நமக்கான பெஞ்சி

4 Comments »

பேயோன் on March 15th 2010 in கவிதை

ரயில் நிலையம்

எல்லோரும் ஊருக்குப் போகிறார்கள்
எல்லோர் கையிலும் மூட்டை முடிச்சுகள்

எல்லோரும் வீடு திரும்புகிறார்கள்
எல்லோரிடமும் பெட்டி படுக்கைகள்

எல்லோர் கண்ணிலும் பிரிவின் வேதனை
எல்லோர் முகத்திலும் பிரிந்த நிம்மதி

எல்லோரும் வழியனுப்ப வந்திருக்கிறார்கள்
பிரிவில் வலுக்கிறது உறவு

எல்லோரும் ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள்
காத்திருப்பில் முடிகிறது பயணம்

12 Comments »

பேயோன் on March 11th 2010 in கவிதை

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar