சமீபத்தில் அனேகமாக எனது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரனைப் பார்த்தேன். ராஜேஷ் சார் தமிழ் சினிமாவின் புதிய அலையால் அடித்து வரப்பட்டவர். இவருடைய முதல் படம் தமிழ் சினிமாவின் தனித்துவமானதொரு காதல் கதையாகும். இரண்டாவது படமாகிய பாஸ் என்கிற பாஸ்கரன் முற்றிலும் வேறு திசையில் பயணம் கொள்கிறது.
கதையின் நாயகன் பாஸ்கரன் உயர் மத்தியதர வகுப்புக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயது தந்தை இழப்பில் உறவுப் பிரிவை சந்திக்கும் பாஸ்கரன் தாயின் மிகையான அன்பால் லௌகீக ஈடுபாடுகளில் உடல் சாராத யத்தனங்களைக் கைவிடுகிறான். மனதின் வாழ்க்கை அவனுக்கு தந்தை எரித்த சிதையிலேயே அவிந்துவிடுகிறது. இதனால் உடலின் தேவைகளை பிரதானப்படுத்திய ஒரு வாழ்க்கையினை அவன் வாழ்கிறான். சமுதாயத்தில் முனைப்புடன் பங்கெடுக்கத் தனிமனிதனைத் தயார்படுத்தும் ஒரு கருவியாக கல்வியமைப்பை இனங்கண்டு பாஸ்கரன் அதில் மனதைச் செலுத்த மறுக்கிறான். சமூகத்தின் விளிம்பில் நிற்கும் அவனுக்கு ஆறுதலாக உடனிருக்கிறான் அவனின் நண்பன் நல்லதம்பி.
இப்படியான பாஸ்கரனின் வியர்த்தமானதொரு தேர்வு முயற்சியின்போது சந்திரிகாவை அவன் எதிர்கொள்ள நேரும் அனுபவம் ஏறபடுகிறது. அவளை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறான். அவளோ வாழ்க்கையின் இன்னொரு கூட்டமான முனையில் இருக்கிறாள். துவக்கத்தில் இந்த முரண் இவர்களிடையேயான அடிப்படை சமூக முரண்பாட்டினை வலுவாக்கி வைக்கிறது. கல்வியிலும் சொத்து உருவாக்கும் திறனிலும் உள்ள போதாமை காதலுக்கு தடையாக இருப்பதை தீர்க்க பல முயற்சிகளை மேற்கொள்கிறான். இதற்கிடையில் அவனது முரண்கள் குடும்பத்தினுடனான உறவுகளைக் குலைத்து அவனை பிரிக்கிறது. இதற்கு இன்னொரு இடையில் அவனை காதலிக்க துவங்குகிறாள் சந்திரிகா. அவளுக்காகவாவது பொதுப்புத்தியை செயல்படுத்தும் நெருக்கடிக்கு ஆளாகிறான் பாஸ்கரன்.
எந்த கல்வியமைப்பு தன்னை சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து அகற்றி வைத்ததோ அதே கல்வியமைப்பிற்கு ஒரு கிளையை உருவாக்கி காதலியை அடைவதற்காக சமூகத்துடன் கலக்க பாஸ்கரன் தீர்மானிக்கிறான். நல்லதம்பியின் பணத்தில் கடன் வாங்கி ஒரு டுடோரியல் பள்ளியினை அவன் துவங்குகிறான். கல்வி வணிகமயமாதலால் உண்மையான முன்னேற்றம் கிடைக்காது என்று சித்தரிக்கும் விதமாக சில திருப்பங்களை வைக்கிறார் இயக்குநர். திருப்பங்களின் இறுதியில் நாயகியை அடைகிறான் நாயகன்.
சினிமா முழுவதும் பாஸ்கரன் தனக்கு நேரும் சம்பவங்களை வாழ்க்கையின் பின்விளைவுகளாக ஏற்றபடி அடுத்தடுத்த சம்பவங்களை நோக்கி நகர்கிறான். அக உலகிலேயே வாழும் பாஸ்கரனையும் புற உலகினையும் இணைக்கும் ஊடகமாக வரும் நல்லதம்பி பாஸ்கரனுக்கு கிடைக்காத சராசரி சமூக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதில் திருப்தியுறாமல் அன்னியமானதொரு மொழியில் சதா அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். படிக்காத நடப்பு தலைமுறையை சுரண்டும் முந்தைய தலைமுறையின் கோரப் பிரதிநிதி நம் வேல்பாண்டி. சினிமாவில் வேறு எவரையும் விட அதிக அறிவுசாலியான சந்திரிகா ஒரு சமகால சினிமா கதையின் எல்லைகளை சரியாகப் புரிந்துகொண்டவளாக இருக்கிறாள். இந்த புரிதலே பாஸ்கரனை காதலிக்க அவளைத் தூண்டுகிறது என்று சொல்ல வேண்டும். நாயகனையும் நாயகியையும் அவர்களின் தோற்றத்தைக் கொண்டே அவர்கள்தான் நாயக நாயகியர் என ஊகிக்கும்படி இயக்குநர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இங்கு எடிட்டிங் பற்றி சில வரிகள்.
இயல்பாக அமைய வேண்டிய மனித உறவுகள் சமூகம் விதித்த விதிகளால் எவ்வளவு அல்லல்களுக்கு உட்படுகின்றன என்று இந்த சினிமா கூறுகிறது. அத்துடன் இலக்கின்மை சார்ந்த வாளாவிருத்தலுக்குத் தீர்வாக உலகாயதவாதத்தை முன்வைக்கிறது ராஜேஷ் சாரின் இந்த படம்.
சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.
சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.