<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேயோன் &#187; சிறுவர் கதை</title>
	<atom:link href="http://www.writerpayon.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerpayon.com</link>
	<description>படித்ததில் பிடித்தவன்</description>
	<lastBuildDate>Fri, 27 Jan 2012 15:19:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஒரு குழந்தைக்குச் சொன்ன கதை</title>
		<link>http://www.writerpayon.com/2011/08/16/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://www.writerpayon.com/2011/08/16/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 16 Aug 2011 07:49:37 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[புனைவு]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சிறுவர் கதை]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpayon.com/?p=2042</guid>
		<description><![CDATA[இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ராட்சத லாரி ஒன்று பயங்கர வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தது ஒரு முயல். லாரி எவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருந்தது என்றால், அதன் முன்புற டயர்களில் ஒன்று &#8211; வலப்பக்கம் இருப்பது &#8211; பிய்த்துக்கொண்டு தனியாக ஓட ஆரம்பித்துவிட்டது. ஆனால் முயல் அது கழன்று போனது தெரியாமலே தன் பாட்டிற்கு &#8230; <a href="http://www.writerpayon.com/2011/08/16/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-2043" title="" src="http://www.writerpayon.com/wp-content/uploads/2011/08/muyal.jpg" alt="" width="450" height="292" /></p>
<p>இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ராட்சத லாரி ஒன்று பயங்கர வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தது ஒரு முயல்.</p>
<p>லாரி எவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருந்தது என்றால், அதன் முன்புற டயர்களில் ஒன்று &#8211; வலப்பக்கம் இருப்பது &#8211; பிய்த்துக்கொண்டு தனியாக ஓட ஆரம்பித்துவிட்டது. ஆனால் முயல் அது கழன்று போனது தெரியாமலே தன் பாட்டிற்கு லாரியை ஓட்டிக்கொண்டிருந்தது.</p>
<p>டயர் மிக வேகமாகப் போய் ஒரு பெரிய மாமரத்தின் மேல் மோதி பல முறை சுழன்றுவிட்டு விழுந்தது.</p>
<p>மாமரத்திற்குத் தூக்கம் கலைந்தது. &#8220;யாரடா அது என் தூக்கத்தைக் கலைத்தது?&#8221; என கர்ஜித்துக்கொண்டே எழுந்தது மாமரம். இலைகளை சிலுப்பிக்கொண்டு எல்லா பக்கமும் பார்த்த மாமரம், கீழே கிடந்த டயரையும் தொலைவில் போய்க்கொண்டிருந்த லாரியையும் பார்த்தது.</p>
<p>&#8220;உன்னை விட்டேனா பார்!&#8221; என்று கத்திக்கொண்டே மாமரம் நெடுஞ்சாலையில் இறங்கி மிக வேகமாக ஓடி லாரியைத் துரத்தியது. மாமரம் துரத்துவது முயலுக்குத் தெரியவேயில்லை. அது நிறுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தது.</p>
<p>மாமரம் தனது மாங்காய்களை ஒவ்வொன்றாக லாரி மீது விட்டெறிந்தது. மாங்காய்கள் எல்லாம் தீர்ந்து லாரி நிரம்பிவிட்டது. ஆனால் லாரி நிற்கவேயில்லை. பிறகு மாமரம் தனது கிளைகளைப் பிடுங்கி ஒவ்வொன்றாக லாரியின் மேல் வீசியது.</p>
<p>மாமரம் வீசிய ஒரு பெரிய கிளை டயர்களுக்கு இடையில் சிக்கியது. லாரி பெரிய கிறீச்சிடும் ஓசையுடன் சறுக்கி நின்றது. லாரியை ஓட்டுபவரை ஒரு கை பார்க்க மாமரம் விரைந்து சென்றது. ஆனால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு பொம்மை முயல்.</p>
<p>துணுக்குற்ற மாமரம் அந்த பொம்மை முயலைக் கையிலெடுத்துப் பார்த்தது. பொம்மை முயல் பீப் பீப் பீப் பீப் என்று சத்தம் போட்டுவிட்டு டமால் என்று வெடித்துச் சிதறியது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2011/08/16/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதலையும் சியாமள விகாச பட்சியும்</title>
		<link>http://www.writerpayon.com/2010/08/04/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa/</link>
		<comments>http://www.writerpayon.com/2010/08/04/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Wed, 04 Aug 2010 13:13:43 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[ஓவியம்]]></category>
		<category><![CDATA[புனைவு]]></category>
		<category><![CDATA[சிறுவர் கதை]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpayon.com/?p=1446</guid>
		<description><![CDATA[(குழந்தைகளுக்கான புனைவு) காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன. அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு &#8230; <a href="http://www.writerpayon.com/2010/08/04/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;">(குழந்தைகளுக்கான புனைவு)</p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1447" style="word-spacing: normal;" src="http://www.writerpayon.com/wp-content/uploads/2010/08/crocodile.jpg" alt="" width="550" height="297" /></p>
<p style="word-spacing: normal;">காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன.</p>
<p style="word-spacing: normal;">அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருளில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது. எண்ணிக்கை துறந்த ஆலகால விழுதுகள் ஆயிரங்கால் மண்டபமாய் அம்மரத்தைத் தோற்றங்கொள்ள வைத்தன.</p>
<p style="word-spacing: normal;">இப்படியான அந்தக் கத்தரி மரத்தில் ஏறி அதன் கனிகளை உண்டு செரிக்கும் பழக்கத்தைத் தனதாக்கிக்கொண்டிருந்தது ஒரு நதி முதலை. அனுதினமும் சூரியன் ஆகாயத்தின் உச்சிக்கு மெல்லத் தாவிக்கொண்டிருக்கும் காலப்பொழுதில் நமது முதலையும் கத்தரிப்பழம் தேடி மரத்தில் ஆரோகணிக்கும்.</p>
<p style="word-spacing: normal;">ஒருநாள் முதலையின் கண்களில் பட்டவை ஆற்றுநீரின் மேல் கிளைத்தோங்கிய ஒரு கிளையில் தொங்கிய கத்தரிப் பழங்கள். நான்கு கால்களால் மரத்தைப் பிடித்து ஏறி நீள்முகத்தை நீட்டிக் கத்தரிப் பழங்களை அண்மிக்கையில் சறுக்கி விழுந்தது நதி நீரில் தலைகீழாக நமது கதாநாயக உயர்முதலை. வாயிலும் மூக்கிலும் நீரும் சேறும் உட்புகுந்து மூச்சுத் திணறி முதலை தத்தளித்தது. அதன் குட்டைக் கால்களை ஆற்றின் அல்லிப் பாம்புகள் சுற்றிக்கொண்டன.</p>
<p style="word-spacing: normal;">திடீரென சிறகடிக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்தது முதலை. அது சறுக்கிய கிளையில் வந்து அமர்ந்தது ஒரு புராதன சியாமள விகாச பட்சி. முதலை திமிறத் திமிற பாம்புப் பிடிகள் இறுகியதைப் பட்சி பார்த்தது. முதலையின் உயிரூசல் நீடித்தால் அதன் பௌதிக இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என உணர்ந்தது பட்சி.</p>
<p style="word-spacing: normal;">இன்னொரு இணை உலகில் ஒரு மூதாட்டியிடம் களவாடியிருந்த வடையைக் காலடி பொந்திற்குள் பதுக்கிவைத்த அந்தச் சிறகுதாரி, விருட்டென எழுந்து கருஞ்சிறகுகளை அடித்தபடி நீரினுள் பாய்ந்தது. கணப்பொழுதில் பாம்புகளைக் கொய்து முதலையை விடுவித்து முதலையின் நன்றிக்குக் காத்திராமல் வானுக்குள் தாவியது. கத்தரி மரத்தின் நீர் தீண்டாக் கிளையில் ஏறிக் கத்தரிப் பழங்களை உண்டு நதிக்கரைக்குத் திரும்பியது முதலை, புராதன சியாமள விகாச பட்சியின் மேலதிக பிரக்ஞையுடன்.</p>
<p style="word-spacing: normal;">பிறிதொரு நாள், பிறிதொரு சமயம், பட்சியினுடைய முறையின்பேரில் ஒரு வேட்டுவன் அந்த வனத்தில் பிரவேசித்தான். ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்.</p>
<p style="word-spacing: normal;">அந்நேரம் வேட்டுவத் துப்பாக்கி தோளேறியதைக் கண்ணுற்றது நதியில் நீந்திய உயர்கதாநாயக முதலை. சின்னஞ்சிறு கால்களால் நீரை அளைந்தபடி மெல்லக் கரை நோக்கி முன்னேறிய முதலை, வேட்டுவனின் விழிகளூடே மரணம் தன் இரக்கமற்ற பார்வையைப் பட்சியின் மீது செலுத்தியதைக் கண்டு பதைத்தது. பட்சிக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் என உணர்ந்து வேட்டுவனை நோக்கி விரைந்தது.</p>
<p style="word-spacing: normal;">மிகைப்படுத்திய மனிதத் தலை போன்றதொரு பாறையின் மேல் நின்றிருந்தான் வேட்டுவன். துப்பாக்கியின் எய்விசையில் விரலை அமர்த்திப் பட்சியின் தரிசனத்தில் அவன் ஆழ்ந்தான். முதலை நீரிலிருந்து வெளிப்பட்டு வேட்டுவனுக்கும் பட்சியின் மரணத்திற்கும் இடையிலிருந்த அரை நொடியில் அடியெடுத்து வைத்தது. வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் அலறி துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். சப்தம் எழும்பிய இடத்தைப் பட்சியின் காதுகள் தேட, அவற்றைப் பின்தொடர்ந்த அதன் கண்கள் இலை இடைவெளிகளூடே ஓடிய வேட்டுவன் மீது பதிந்து புரிதலில் விரிந்தன.</p>
<p style="word-spacing: normal;">ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. குழந்தைகளே, இந்தப் பிரதிக்கும் அது உண்டு. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.</p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1449" style="word-spacing: normal;" src="http://www.writerpayon.com/wp-content/uploads/2010/08/mudhalai2.jpg" alt="" width="550" height="308" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2010/08/04/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>17</slash:comments>
		</item>
		<item>
		<title>மனம் திருந்திய மன்னன்</title>
		<link>http://www.writerpayon.com/2010/03/12/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://www.writerpayon.com/2010/03/12/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 12 Mar 2010 05:42:24 +0000</pubDate>
		<dc:creator>பேயோன்</dc:creator>
				<category><![CDATA[புனைவு]]></category>
		<category><![CDATA[குட்டிக் கதை]]></category>
		<category><![CDATA[சிறுவர் கதை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=114</guid>
		<description><![CDATA[துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான். போஜனம் ஆனவுடன் &#8230; <a href="http://www.writerpayon.com/2010/03/12/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="word-spacing: normal;">துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.</p>
<p style="word-spacing: normal;">போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், &#8220;ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்&#8221; என்று கூறினார்.</p>
<p style="word-spacing: normal;">மன்னன் முனிவரையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்றுவிட்டு பிரம்மனை நோக்கித் தவமிருக்கலானான். இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல், வெயில் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் பொறுத்துக்கொண்டு பிரம்ம தரிசனத்துக்காகத் தவம் கிடந்தான்.</p>
<p style="word-spacing: normal;">இவ்வாறாகப் பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஒரு நாள் அவன் முன்னே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அதிலிருந்து அழகிய தேவகன்னிகை ஒருத்தி வெளிப்பட்டுப் புன்னகைத்தாள். &#8220;நரனே! நான் பிரம்மதேவனின் காரியதரிசி. நீ செய்திருக்கும் எண்ணற்ற பாவங்களுக்கு அவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட மாட்டார். நீ முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று இன்னும் ஐம்பத்தியெட்டு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்&#8221; என்று கூறி மறைந்தாள்.</p>
<p style="word-spacing: normal;">மயூரசன்மன் அவள் சொற்படி முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தான். அறுபத்தியிரண்டு லக்ஷம் ஆண்டுகள் கழித்து மன்னனுக்கு நா வறண்டுபோய் சொல்லொணாத் தாகம் ஏற்பட்டுத் தவம் கலைந்தது. சிறிது நீர் அருந்திவிட்டுத் தவத்தைத் தொடரலாம் என்று எண்ணிய மன்னன், அந்தக் கானகத்தில் நீர் தேடி நெடுந்தூரம் அலைந்தான். அருவிகள், ஓடைகள் எல்லாம் வற்றியிருந்தன. சுனைகள் காய்ந்த இலைகளால் நிரம்பியிருந்தன. அவனிருந்த மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. மனம் வெறுத்த மன்னன், காட்டிலிருந்து வெளியேறினான்.</p>
<p style="word-spacing: normal;">மயூரசன்மன் நாட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோக்களை, கார்களை, தொலைபேசி பூத்களை, மொபைல் போன் கடைகளை, திரையரங்குகளைக் கண்டான். யுகம் மாறிவிட்டது என்றும் தன் தவத்தை இனியும் தொடரவியலாது என்றும் உணர்ந்தான். கலியுகத் தொழில்கள் எவையும் தெரியாததால் மயூரசன்மன் தாகத்தைத் தணித்துக்கொண்ட பின் காசிக்குச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினான்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpayon.com/2010/03/12/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

